பக்கம்:மக்கட் செல்வம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐம்புல நுகர்வு

113


குறுக்கீடு முதலியவற்றால் அவை நல்ல வகையில் உணர்வு பெற்று வளர முடிவதில்லை, இதனாலேயே சில குழந்தைகள் சுற்றுச்சார்புகளால் சிறக்க, சில சுற்றுச் சார்புகளின் தாழ்கநிலையாலே கெடுகின்றன. எனவே பெற்றவர் தங்களுக்குள் எத்தனை வேற்றுமையும் தாழ்வுத் தன்மையும் இருந்தாலும் குழந்தைகளை நல்ல சுற்றுச் சார்புகளுக்கு இடையே வளர்க்கவேண்டும்.

அன்பின் அரசி!

இவைபற்றியெல்லாம் இன்னும் எத்தனைப் பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம். எனினும் கடிதம் நீளலாகாது அல்லவா! நீ வாய்ப்பு நேரும்போது நல்ல நூல்களை வாங்கிப் படித்துக்கொள். நீ இங்குவரும்போது இரண்டொரு நல்ல நூல்களைத் தருகிறேன். இன்றைக்கு இந்த அளவோடு நிறுத்திக்கொள்ளலாமென நினைக்கிறேன்.


அன்புள்ள,
அப்பா

.