பக்கம்:மக்கட் செல்வம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123

அடித்தா? அனைத்தா?


மங்கையர்க்கரசிக்கு, . இதுவரை எழுதிய கடிதங்களில் பிள்ளைமை இன்பத்தைப் பற்றியும், அது கருவில் வளரும் திறம்பற்றியும், பிறந்து வளரும் நிலைபற்றியும் எழுதியிருந்தேன். இக்கடிதத்தில் அக்குழந்தையை-வாழ்வின் வள மார் செல்வத்தை-பெரும்பேற்றை-எப்படி வளர்க்க வேண்டும் என்பதுபற்றிச் சிறிது எழுதலாம் என்று நினைக்கின்றேன். இது பற்றி முன் சங்கச் சான்றோர் காட்டிய சில பாடல்களைக் காட்டினேன். இங்கே பொதுவாகச் சில கருத்துக்களைச் சொல்லுகிறேன். -

உலகில் பிறக்கும் பிள்ளைகள் அனைத்தும் அழகு டையனவாகவோ அறிவுடையனவாகவோ திறல் உடை யனவாகவோ இருப்பதில்லை. இதற்கு எத்தனையோ