பக்கம்:மக்கட் செல்வம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.7. பிள்ளைப் பேறு வேண்டாவா ? அன்பின் அரசி ! இன்று உனக்குப் புதுவகையில் இக்கடிதத்தை எழுத்த் தொடங்குகின்றேன். இதுவரையில் நான் எழுதிய கடிதங்களையெல்லாம் முறையாகப் படித்துங் பயன் பெற்றிருப்பாய். அவற்றிலெல்லாம் மக்கட்பேறே மனித வாழ்வில் மிகச் சிறந்தது என்பதை எத்தனை எத்தனை புலவர்கள் விளக்கியுள்ளார்கள் என்பதை நீ அறிந்து கொண்டாயல்லவா! ஆம்! அன்று தொட்டு இன்றுவரை தமிழ் நாட்டில் வாழ்ந்த எத்தனையோ புலவர்கள் பாராட்டிய இந்த மக்கட் செல்வத்தைப்பற்றி இன்று எத்தனையே பேர் எத்தனையோ வகையில் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் வருவதை நீ அறிந்திருப்பாய் என நினைக்கிறேன். - உலகில் மக்கள் தொகை நாள்தோறும் வளர்ந்து கொண்டே போவதை அனேவ்ரும் அறிந்துதான் இருக்கி