பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is0 மக்கள்குழு ஒப்பந்தம் வர முடியாமையே அறிவிக்கின்றது - இவற்றையெல்லாம் நீ சொல்லாமலே யாங்கள் தெரிந்து கொண்டோம்” - என வானரர்கள் கூறினார்களாம். இதைச் சுந்தரகாண்டம் திருவடி தொழுத படலத்திலுள்ள பொருதமை புண்ணே சொல்ல, வென்றமை போந்த தன்மை உரைசெய, ஊர்தீ யிட்டது ஓங்கிரும் புகையே ஒத, கருதலர் பெருமை தேவி மீண்டிலாச் செயலே காட்டத் தெரிதர உணர்ந்தோம் பின்னர் என்னினிச் செய்தும் என்றார்' என்னும் பாடலால் அறியலாம். இதில் கம்பர் பெருமானின் சிறந்த கைவண்ணமும் அறியக் கிடக்கிறது. அனுமன் வானரர்களோடு ஒரளவு நேரம் கழித்த பின் னர் இராமனை அடைந்தான். அனுமனைக் கண்ட இராமன், அனுமன் வழக்கம்போல், தன்னைத் தொழுது வணங்குவான் எனவும் உடனடியாகச் சீதையைப் பற்றிய செய்திகளைச் சொல்லுவான் எனவும் எதிர்பார்த்திருக்க லாம். ஆனால் சொல்லின் செல்வன் சொன்னானா? அல்லது ஒன்றும் சொல்ல வில்லையா? அனுமன் இராமனை அடைந்ததும் தொழவே இல்லை; ஒன்றும் சொல்லவே இல்லை. இராமன் தன் முதுகுப் பக்கத் தைக் காணுமாறு அனுமன் திரும்பிக் கொண்டான்; சீதை இருந்த தென் திசையை நோக்கி முகத்தை வைத்துக் கொண்டான்; தன் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வைத்துக் கொண்டான்; இராமன் பக்கம் காலை நீட்டிக் கொண்டும் சீதையிருக்கும் பக்கம் தலையை