பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 15 இதற்கு ஐக்கிய நாடுகள் சங்கம்' என்பது பெயர். இதன் முயற்சியால் எத்தனையோ சண்டைகள் நின்று விட்டன. ஓர் ஊரார் ஒன்று சேர்ந்தாலே பல நன்மைகள் உண்டு. உலகத்தார் ஒன்று சேர்ந்தால் சொல்லவா வேண்டும்? சர்க்கரைப்பந்தலில் தேன் மழை பொழிந்தது போலத்தான்! அது சரி, இப்படியே சொல்லிக் கொண்டு போகிறோமே! பெரிய இரகசியத்தைக் கண்டு பிடிப்பது எப்போது? ஆமாம்! ஆமாம்! இதோ வந்து விட்டோம். அங்கே கொண்டுபோய் விடும் பாதைதான் இது! பெரிய இரகசியத் தின் பக்கத்தில் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம்; நெருங்கியும் விட்டோம். இப்போது தெரியலாமே! ஒருவன் தன் கண்ணான பெண்ணைக் கட்டிக் கொடுப்பது எதற்கு? தன் உயிர்க்கு உயிரான பிள்ளையை ஆசிரியரை நம்பி ஒப்படைப்பது எதற்கு? போலீசுகாரர் ஏன்? நீதிபதி ஏன்? அதிகாரிகள் ஏன்? சட்ட சபை ஏன்? தலைவர்கள் ஏன்? அமைச்சர்கள் ஏன்? இந்த ஏற்பாடுகள் இல்லாவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? மனிதன் மறுபடியும் விலங்கு வாழ்க்கைக்குப் போய்விடுவான். கண்டவன் மனைவியைக் கற்பழிக்க நினைப்பான். கணவன் மனைவி இல்லை. பெற்றோர் பிள்ளை இல்லை. குடும்பம் இல்லை. கல்வி இல்லை. இன்பம் இல்லை. துன்பம் துன்பமே! • . -- இது மட்டுமா? ஒருவனை ஒருவன் அடிப்பான். பொருளைத் திருடுவான். பிறருக்கு உதவமாட்டான். தான் வாழ்ந்தால் போதும் என்று நினைப்பான். தன் வசதிக் காகப் பிறரைக் கெடுப்பான். இப்படி நடக்கும். கேட்டுக்