பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 63 முதியவர் : ஒ அதுவா! ஏதோ கோயில் குடிக்காடு ஒரு காலத்தில் இருந்ததாகவும், அப்புறம் அழிந்து போய் விட்டதாகவும் சொல்கேள்வி. நான் : என்ன கோயில் என்று தெரியுமா? முதியவர் : தெரியாது. நான் : சிவன் கோயிலா? பெருமாள் கோயிலா? முதியவர் : நம்ம சாமி கோயில் இல்லை; வேறு சாமி கோயிலாம். நான் ; வேறு சாமி கோயில் என்றால்...? முதியவர் : ஏதாவது கிறித்தவர் கோயிலாயிருக்கும். நான் : கிறித்தவர் கோயில் என்றால், இங்கே யாராவது கிறித்தவப் பாதிரிமார்கள் இருந் திருப்பார்களா? அதனால்தான் இவ்வூருக்குப் பாதிரிக் குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதா? அல்லது நீங்கள் முதலில் சொன்னவாறு பாதிரி மரம் இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டதா? முதியவர் : ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இஃது எனக்கும் முதியவருக்கும் இடையே நடந்த வினாவிடை-உரையாடல். முதியவர் கிறித்தவக் கோயிலா யிருக்கும் என்று சொன்னது சரியன்று. சமண பெளத்த மதங்களைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாதலின் கிறித்தவக் கோயிலாயிருக்கலாம் என்று சொன்னார். மேலும், அங்கே கிறித்தவர்கள் இல்லையாதலின் கிறித்தவக் கோயில் எழக்காரணம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் அஃது அழிவதற்குக் காரணம் இல்லை. அன்றியும் பழைய காலத்தில் அங்கே கிறித்தவக் கோயில் ஏற்பட வாய்ப்பில்லை. நான் கேட்டதற்காக, அவர் அறிந்த வேறு மதத்தை அம்முதியவர் குறிப்பிட்டார்.