பக்கம்:மக்கள் குழு ஒப்பந்தம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள்குழு ஒப்பந்தம் 83 கழித்ததுபோலவே மற்ற நாட்களிலும் இருப்பானேயானால் அவன் அத்திங்களில் ஒரு நாள் மட்டும் உயிர்வாழ்ந்த தாகவே பொருள். அதுபோலவே, ஒராண்டு முழுவதும் ஒருநாளில் செய்ததுபோல் மட்டும் செய்து கொண்டிருப் பானேயாயின், அவ்வாண்டில் ஒரு நாள் மட்டும் உயிர் வாழ்ந்ததாகவே பொருள். இப்படிப் பார்த்தால் அவன் வாழ்நாளின் அளவு என்ன? அவன் பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்தாலும், உண்மையில் சின்னாட்கள் உயிர் வாழ்ந்ததாகவே பொருள். அதாவது, அவன் உயிரோடு. பல ஆண்டுகளாக உலவிக் கொண்டிருந்தாலும், உண்மை யில் அவன் எப்போதே இறந்துவிட்டதாகவே பொருளாம். எனவே, வசையின்றி இசையுடன் வாழ்பவரே உண்மையில் உயிர் வாழ்பவராவார்கள்; இசையின்றி வசையுடன் வாழ் பவரோ உயிர் வாழ்பவராகக் கருதப்பட மாட்டார்கள். இதனால்தான், பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லையெனின் பிறவாதிருப்பதே நல்லது என்று வள்ளுவப் பெருமான் திருவாய் மலர்ந்துளார். பிறக்கும்போதே எப்படிப் புகழோடு பிறக்க முடியும்? அப்படியென்றால் பொருள் என்ன? அதாவது உலகில் மக்களாய்ப் பிறந்த வர்கள் நற்பணிகள் புரிந்து புகழோடு வாழவேண்டும்; அங்ங்ணம் வாழாதவர்கள், பிறந்தும் பிறவாதவராகவே கருதப் படுவார்கள் - என்பது பொருள். ' வசைஒழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய வாழ்வாரே வாழா தவர் ” " தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று ” வள்ளுவனார் கூறியாங்குப் புகழுக்கு இவ்வளவு புகழ் இருக்கும்போது, பலர் புகழ்ச் செயல்கள் புரியாதிருப்பது