பக்கம்:மக்கள் தீர்ப்பு, அண்ணாதுரை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

மக்கள் தீர்ப்பு


மக்கள், விளக்கமறியாத வெறும் கும்பல்தான், சந்தேகமில்லை" -- என்று டாக்டர் மன வேதனையுடன் கூறினார். அவருடைய மருமானுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியவி.லை ஆனால், மனதிலேமட்டும், பொதுமக்கள் உண்மையை உணர்ந்தால் நீதிக்காகப் போராடுவர் என்ற நம்பிக்கை தளராமலிருந்துவந்தது. ஆனால், உண்மையைப் பொதுமக்கள் உணரவேண்டுமே! அதற்கான வழிதான் அடைபட்டுப்போயிருக்கிறது -- பணமூட்டைகளைப் போட்டல்லவா அந்த வழியை அடைத்துவிட்டார், சீமான்! என்ன செய்வது?

***

கப்பல் தலைவனாக இருந்த நிலைமை, உண்மைக்குப் பாடுபடத் துணிந்தவருக்கு உபகாரம் செய்யச் சென்ற தால், பாழ்பட்டுவிட்டது -- பிறகு, மருமகனான் அவன். நாலைந்து சிறு படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, மீன் பிடிக்கும் தொழிலிலே அமர்ந்தான் -- சுமாராகத்தான் வருமானம் கிடைத்தது எனினும், அடிமை வேலையல்ல என்ற எண்ணம் அவனுக்குத் தனியானதோர் இன்பம் தந்தது. மேலும், தத்தை, அவனுடைய வாழ்க்கைக்கு கீதமானாள். மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. ஒரே ஒரு மனக்குறை தான். எப்படிப் பொதுமக்களை உண்மையை உணரும்படிச் செய்வது, உலுத்தர்களின் கொட்டத்தை எப்படி அடக்குவது என்பது தெரியாததால் ஏற்பட்ட மனக்குறை தான். மீன் பிடிக்க வலை வீசும்போது, மீன்களை விலை பேசி விற்பனை செய்யும்போதும், கிடைத்த பணத்தைக் கணக்கு பார்க்கும்போதும், கூட்டு பணியாற்றும் தோழர்களுக்குப் பணத்தைப் பிரித்துத் தருகிறபோதும், எந்த வேலை செய்