பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 திருமணம் என்ற சொல்லின் நறுமணம் திருமணம் என்ற சொல்லே அழகிய அரிய சொல். அதில் திருவு முண்டு ; மனமுடைய திருவுமுண்டு. கல்வியோடு செல்வமும் சேர்ந்தால் பொன மலர் காற்றம் (கல்வாசனை - கல் மனம்) பெற்றது போலாகும் என்று பாடினர் ஒரு பெரியார். திருமணம் என்ற சொல்லில் பொன் மலர் நாற்றம் பொங்குகிறது அல்லவா? தமிழ் மக்கள் தங்கள் வாழ்வின் சிறப்பு.ை அவர்கள் அறிவின் பெருமையை அளந்து காட்டு கிறது ; அச் சொல்லிலிருந்து எழும் நறுமணம்திருமணம்-கம் உள்ளத்தை எல்லாம் கொள்ளை கொள்ளுகிறது. மனிதன் எதற்காகத் திருமணம் செய் து கொள்ள வேண்டும் இதுவே முதற் கேள்வி. இக் கேள்விக்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் தாம் பாடியுள்ள அருமையான நாடகக் காப்பியமாகிய மனேன்மணியம்’ என்ற நூலில் அழகான பதில் தங்துள்ளார். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கல்விக் கடல் ; கற்பனைச் சுரங்கம் ; தத் துவ மனை; தமிழ்ச்சுனே. எனவே, அப்பெரியாரின் வாசகம் தெவிட்டாத தெள்ளமுதாய்ப் படிப்பவர் எல்லார்க்கும் இன்பமும் பயனும் வழங்குதல் திண்னம. {ଈy கற்பனைக் கெதிராய் அற்பமும் மொழியேன் , ஆயினும் ஐயமொன் றுண்டு ; நேயமும்