பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பெருமை தருவதன்று. பெற்றவரையும் பெற்ற பேருலகிற்கே பெருமை தருவது. அதுவும் பெற் ருேரைக் காட்டிலும் பிள்ளைகள் சிறந்தவராயின் அது உலகிற்கு எல்லாம் உவப்பு தருவது. உயர்ந்த இத் திருக்குறளுக்குப் பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்களின் தெளிவுரை வருமாறு:

  • தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.’

வாழ்க திருமண மக்கள் ! வாழ்க மனைமாட்சி ! வாழ்க வையகம் ! (குறிப்பு: வாலாஜாபாத் இந்துமத பாடசாலை அப்பா திரு வா. தி. மாசிலாமணி அவர்கள் விருப்பத்திற் கிணங்க எழுதப்பட்டு குருகுலம் 3-7-1984 இதழில் வெளியிடப்பட்ட கட்டுரை.)