பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 கிறைந்துள்ளன. இச் சர்க்கரை மூச்சிழுக்கும் போது கிடைக்கும் உயிர்க் காற்றுடன் (Oxygen) எரிந்து வேலை செய்ய ஆற்றலையும் வெப்பத்தை யும் தருகிறது. எளிய உணவில் வலிய உணவு எனவே, குழந்தை உணவில் பால், மோர், தயிர், வெண்ணெய், பழச்சாறுகள் இவை இன்றி யமையாமல் இடம் பெறல் வேண்டும். மோர் ஏழை முதல் பணக்காரர் வரை யாவரும் பெறத்தக்க எ னி ய உணவு. அதேபோல எல்லோராலும் ஆப்பிள் உண்டு வளர இயலாது. அவர்களுக்குத் தினம் இரண்டு கெல்லிக்கனிகளைக் கொடுப்பின், அது ஒரு ஆப்பிளுக்குச் சமமான சத்துக்களைக் கொடுக்கின்றது. எனவே கெல்லிக்காய் ஊறுகாய் மிகவும் கல்லது. இதேபோல் விலை அதிகமாயுள்ள உணவுப் பொருள்களில் இருக்கும் சத்துக்கள் எளிய உணவுப் பொருள் எவ்வெவற்றிலிருக்கிற தென ஆராய்ந்து அறிந்தவரை-உணவியல் அறி ஞரைக் கலந்து அவற்றைக் குழந்தைகட்டுக் கொடுத்தல் நலம். கலைக் களஞ்சியம் போன்ற நூல்களை நூல் கிலேயத்திலேனும் பார்த்து அதில் உணவியல் பற்றிப் பொதுவாகவும் உணவுப் பொருள் ஒவ்வொன்றைப் பற்றியும் சிறப்பாகவும் உள்ள கட்டுரையைப் படித்துப் பயன்பெறல் வேண்டும். உணவு ம ரு த் துவ ம் பற்றியும் கைமருத்துவம் பற்றியும் உணவுப் பொருள்கள் பற்றியும் அறிஞர்கள் அவ்வப்போது எழுதும்