பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 ஏற்படும் நன்மைகள் முதலிய கருத்துகள் நிறைந்த கதைகளைக் கூறுதல் வேண்டும். இத்தகைய கருத்துகள் செறிந்த இலக்கியக் கதைகளைவிடக் குழந்தைகள் தினந்தோறும் காணும் உயிரற்ற பொருள்களாகிய மேசை, நாற்காலி, பென்சில் முத லியவை, காய், குதிரை, பசு, யானை, காக்கை, குருவி, கழுகு முதலிய விலங்குகள்-பறவைகள் பேசுவது போன்று கற்பனையால் புனையப்பெற்ற கதைகளில் மேற்கூறிய கருத்துகள் அமையுமாறு கதை கூறினல் அவை எளிதில் குழந்தைகள் மன் தில் பதியும். அவற்றின் உயர்வையும் அறி வார்கள். இதனுல் குழந்தைகள் கினைவாற்றல் வளர்வதோடு தாம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை உணர்வையும் அவர்கள் திறனுக்கேற்றவாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தக்க வாய்ப்பும் ஏற்படுகிறது. தெய்வ பக்தியுள்ள வர்களைப் பார்த்துப் பழகும் குழந்தைக்குத் தெய்வ பக்தியும், சுகாதார-கல்வாழ்வு-உடல் கலப் பழக்கமுடையவர்களுடன் கலந்துறவாடும் குழந் தைக்குச் சுகாதார-கல் கல்வாழ்வு-உடல் கலப் பழக்கங்களும் ஏற்படுவது கண்கூடு. இசை இசையின் இனிமைக்கு இசையாத குழக் தைகளே இல்லை. கதையும் பாட்டும் குழங்தைகளின் மனப் பண்பை உறுதியுடையதாயும் உருக்கமுடையதாக