பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 வும் செய்கிறது. சில குழந்தைகள் இசையில்பாட்டில்-ஈடுபட்டு அதே போன்று பாடக் கற்றுக் கொள்கின்றன. சுறுசுறுப்பான குழந்தைகள் இசைக்கேற்ற உறுப்பு அசைவுகளையும் ஆட்டங் களையும் தாமாகவே செய்கின்றன. இக்குழந்தை கட்கு கடனம் பயிற்றுவித்தல் நல்லது. இதல்ை குழந்தையின் மனம் உற்சாகமடைவதன்றி உறுப்பு அசைவுகளைக் கட்டுப்படுத்தவும் சமனப்படுத்தவும் கற்கின்றன. எனவே நேராக கிற்கவும் கடக்கவும் பயிற்சி ஏற்படுகிறது. ஒரு விதத்தில் இசையின் தாளக் கட்டிற்கேற்ப அசைவுகள் ஏற்படுவதால் சூழ்நிலைக்கேற்ப உள்ளப் போக்கையும் சமனப் படுத்த இக்குழங்தைகள் பயிற்சி பெறுகின்றன. இசையையும் கூத்தையும் குழந்தைகட்குக் கற்பிப் பதன் கோக்கம் உடலைப் போற்றி உள்ளத்தை உயர்த்திக் கலையின் வழி கடவுள் உணர்ச்சி பெறு வதாகவே இருக்க வேண்டும். பள்ளிக்கூட வாழ்வின் பயன் ஐந்து வயதில் குழந்தைகள் பள்ளிக்குச் செல் கின்றன; பிறர் சொல்லுக்குக் கட்டுப்படுகின்றன; சிந்திக்கின்றன; செயல் ஆற்றுகின்றன. இந்தக் காலத்தில் வீட்டில் உருவாகிய ஒழுக் கங்கள் கிலைபெறுவதால் வெளிச் சூழ்நிலைச் சோதனைகள் அவற்றைக் குறைவாகவே தாக்குகின் றன. நாவையும் மனத்தையும் கட்டுப்படுத்தி ஒரு ஒழுங்குக்குக் கொண்டுவர ஆசிரியரின் கல்விப் பயிற்சியும் அறவுரைகளும் உதவுகின்றன. பிற