59
இந்த உரிமையைக் கூடவா மன்னர் பறிக்க. கினைக்கிருர்.
சுதா : கணவன்! நல்ல ஜாலக்காரி இவள். முகங்காட்டி முத்துககை காட்டி, சித்து விளையாடிச் சீமான் களின் செல்வத்தைச் சூறையாடும் இவள்...மனள னைத் தவிர மற்றெவர்க்கும் முகத்தைக் காட்ட மாட்டாளாம்! மஹாராஜா இவள், வாலிபத்தில் புஷ்பத்தைப் போலவும், வயோதிகத்தில் பழத் தைப் போலவும் இருக்க இச்சைப்படும் ஒரு வேசி. இந்தப் புனிதவதியின் திருமுகத்தைத் தாங்களே
பாருங்கள்.
(என்றுகூறித் தன் வாளால் அவள் முகத் திரையை எடுத்து)
சுதா : அப்பா ! இவள்தான் இந்த மஹாராஜ்யத் தின் மானத்தைக் கெடுத்த மங்கையர்க்கரசி.
மதுரா : என்ன மங்கையர்க்கரசியா? அவளாயிருக்க முடியாது. எங்கேயாவது வீழ்ந்த கட்சத்திரம் விண்ணுக்குத் தாவுவ துண்டா? அவளுடைய மக்கிப்போன எலும்புகள்கூட, காலாந்தரத்தில் கல்லாக மாறியிருக்குமே. அச்சண்ட்ாளியாவது இன்னும் சாகாமல் இருப்பதாவது!
நாசு : இளவரசர் பிதற்றுகிருர். புலிகேசி இல்லை. நிழலைக் கண்டுபிடிக்க வெளிச்
சத்தை ஏற்றுகிறர். மதுரா: சுதாமா...இந்தப் பெண், மங்கையர்க்கரசி
தான் என்பதற்கு என்ன ஆதாரம்?