பக்கம்:மச்சுவீடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 - மச்சு வீடு

உறியில் வெண்ணெய் எல்லாம்-கிருஷ்ணு உருட்டித் தின்று விட்டாய்-பெண்களை

அதட்டித் தின்று விட்டாய்! என்னடா காரியம்?-கிருஷ்ணு

இத்தனை துடுக்கு ஏண்டா? மாமியார் இதைக் கண்டால்-கிருஷ்ணு

மரியாதை போகுமேடா!

"அட இதற்குத்தானு இவ்வளவு பிரமாதம்? என் னைக் கண்டால் ஏன் இவ்வளவு பயம்? எங்கே, அந்தக் கிழவியைக் காட்டுங்கள்? நானே வந்து என் விஷ மத்தை அவளிடம் கொஞ்சம் காட்டுகிறேன்' என்று கண்ணன் நகைத்துக்கொண்டே சொல்கிருன்:

ஏண்டி இடைச்சிகளா-எனக்கண்டால்

ஏண்டி பதுங்கிறீர்கள்? சின்னக் குழந்தை போல-நான் வருவேன்

விந்தைகளைச் செய்வேன். கூடியே போவோம் வாடி-மாமி

மடியைப் பிடித்திழுப்போம்-அந்தக் கிழவி துணியைப் பிடித்திழுப்போம் ! - நல்ல காரியம் தூங்கிக்கொண்டிருக்கிற புலியை வாலுருவிவிடும் செயல் அல்லவா இது?

- ★ -

வேறு ஒரு கூட்டத்தார் கண்ணன் மேல் வேறு ஒரு விதமான வழக்கை எடுத்துரைக்கிருர்கள். . தங்கக் குடங் கொண்டு-பெண்கள் எல்லாம் தண்ணீர்க்குப் போகையிலே-பெண்கள் ஜலத்துக்குப் போகையிலே-பெண்கள் மடுவிற்குப் போகையிலே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/34&oldid=610703" இலிருந்து மீள்விக்கப்பட்டது