கண்ணன் செய்த சோதனை 57
சிந்தை குளிர இந்தத்
தெரிசனநான் காண என்ருல் இந்திரனைப் போல் நயனம்
என்றனக்குத் தந்திலேயே! தந்திலேயே யசோதைமைந்தா
தாமரைபோல் ஆயிரங்கண்! இந்தத் தரிசனேக்கு
இரண்டுகண்கள் போதாவே!" என்று பார்த்துப் பார்த்து வியப்பிலே ஆழ்ந்தார்.
பத்மநாபன் கிடந்த திருக்கோலம் பார்க்கப் பார்க்கக் கண்ணைப் பறிக்கிறது.
தேவர் முனிவர்கள் சித்தர்களும்
திக்குப் பாலகரும் கின்னரரும் ஆதி நாதர் திருமுடிக்கு
அன்புடன் புஷ்ப மாரிசொரியச் சோதிச் சுடரொளி போல்விளங்கும்
சுந்தரத்திரு மேனி மின்னப் பிரகாசிக்கும் முக மண்டலமும்
பச்சை மேனியும் பளபளென்னr.என் நாதன் இடையில் பீதாம்பரமும்
நவரத்ன அரைஞானும் சோதிவிட அரைச் சதங்கையும் ஒளியழகும் -
ஹாரம் மணிமுத்து மாக்லகளும் ஆலந் தளிரொத்த திருவயிறும்
அமைந்த அங்கியும் பின்னமுகும் பார மரகத மணிமுடிமேல்
பத்ம நாயன் கிரீடம்மின்ன அஞ்சு படத்தாலே அனந்தர்வந்து
ஆதி நாதர்க்குக் குடைபிடிக்கக் கஞ்ச மலரொத்த பாத சேவை
கண்குளிரவே கண்டுகந்தார்.