இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுப்பு என்று ஒரு சின்னப் பையன் இருந்தான். அவன் தம்பியின் பெயர் மணி. சுப்புவுக்கு முதலில் சளிக்காய்ச்சல் வந்தது. அவனோடு சேர்ந்து விளையாடும் மணிக்கும் அது ஒட்டிக்கொண்டது.
இந்தச் சளிக்காய்ச்சல் அவர்களோடு விளையாட வரும் மற்ற குழந்தைகளுக்கும் வரக்கூடாது என்று நினைத்த பெற்றோர்கள், அவர்களை மேல்மாடியில், ஒரு தனி அறையில் படுக்கவைத்தார்கள். மற்றவர்களுடன் சேராமல் தனியாக இருக்கவேண்டுமே என்று முதலில் அவர்களுக்கு அழுகையாக வந்தது. ஆனால், விளையாடுவதற்காகப் பொம்மை டெலிபோன் ஆளுக்கொன்று வாங்கிக் கொடுக்கவே, அந்த அழுகை நின்றுவிட்டது.