இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மணமக்களுக்கு
தாய்மார்களே! பெரியோர்களே! அன்பர்களே! வணக்கம். எல்லோருடைய நல்லெண்ணப்படியும், வாழ்த்துதற்படியும், இன்று இங்குத் தமிழ்த் திருமணம் நடைபெறுகிறது. நாமனைவரும் சான்று கூறவும், வாழ்த்துக் கூறவும் கூடியுள்ளோம்.
தமிழ்த் திருமணம்
மணமக்களின் பெற்றோர்கள் இத்திருமணத்தைத் தமிழ்த் திருமணமாக நடத்திவைக்க முன்வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதற்காக மணமக்களின் பெற்றோர்களைப் பாராட்டுகின்றேன்.
புதிய முறை
இங்கு வந்துள்ள சாதித்தலைவர்கள், நாட்டாண்மைக்காரர்கள், பெரிய தனக்காரர்கள், வயது முதிர்ந்தவர்களில் யாராவது ஒருவர், இத்திருமணம் புதிய முறையில் நடக்கிறதே என்று எண்ணினால், தயவுசெய்து அவர்கள் முதலில் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இதுதான் பழைய முறை.