பக்கம்:மணமக்களுக்கு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

தமிழ் மக்கள், தமிழ் மரபின்வழி திருமணம் செய்துகொண்டு, சீரும் சிறப்பு மாக, இல்லற வாழ்வில், புகழோடும் வளமோடும் வாழ வேண்டும்.

இந்த நன்மரபுக்கு, முத்தமிழ்க் காவலரும் முதுபேரறிஞருமாகிய கி. ஆ. பெ. வி. அவர்கள் வழிகாட்டுகின்றார்கள். இந்நூல் அவர்கள் பல திருமணங்களை நடத்தி வைத்துப் பேசிய பேச்சுக்களின் தொகுப்பாகும்.

திருமணம் செய்து கொண்டவர்களுக்கும், செய்து கொள்ளப் போகிற மணமக்களுக்கும், இந்நூல் சிறந்த ஊன்று கோலாக நின்று உதவும் சிறப்புடையது.

வாழ்வாங்கு வாழ விரும்பும் தமிழக மக்கள். இதனை ஏற்றுப் பயன்பெறுவது நல்லது.

பாரி நிலையத்தார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/5&oldid=1525834" இலிருந்து மீள்விக்கப்பட்டது