இதனை, கையாற் றொழுதுன் கழற்சே வடிகள் கழுமத் தழுவிக்கொண்டு எய்யா தென்றன் தலைமேல் வைத்தெம் ; : : பெருமான் என்றென்று ஐயா வென்றன் வாயா லரற்றி யழல்சேர் ...م - r மெழுகொப்ப ஐயாற்று அரசே ஆசைப் பட்டேன் கண்டா யம்மானே’’ (ஆசைப்பத்து) என்னுஞ் செய்யுளாற் காண்க. (மனம் மொழி மெய் மூன் றாலும் வழிபாடாற்ற வேண்டுமென்று விரும்பியபடி) கண்ணப்பர் காளத்தி மலையிலேறிக் குடுமித் தேவனைக் கண்ட அளவில், பன்னாள்வரையுங் காண்ாது போய் ஒரு நாள் எதிர்ப்பட்ட குழந்தையைத் தாயானவள் எங்கனம் விரைந்து ஒடி இறுகத் தழுவுவாளோ, அங்கனமே தமது தோள்கள் அழுந்தும்படி அப்பெருமானைக் கட்டிப் பிடித்து அழலிற்பட்ட அரக்குப் போன்று மனம் உருகா நிற்க் முத்தமிட்டுத் தமது தூய வாய் திறந்து பல கூறுகிறா அநாள்பல பிரிந்திருந்து கண்ணிய சிறுசதங்கைத் தாளிள மகனைக்கண்ட தாயெனத் தாழாதோடி நீளெழுவனைய தோள்கள் ளுெமுங்குறத் தழுவிமோந்து வாளழ லாக்கி னன்ன மனத்தினான் முத்தங்கொண்டான்' "செய்யகண் ணிரரும்பச் செறிமயிர் பொடிப்பு வாதன் கையகப் பட்டதெய்வக் கதிர்விடு'மணியின் நாயேற் கையன்வந் தகப்பட்டானென்று அணியெயி றிலங்ககக்கு மெய்யெலா மெய்யன்பர்ய விடலை மற் றின்னசொல்வான்' r r (சீகாளத்தி புராணம்) என்பவற்றால் அறிக. எனவே அடிகள் விரும்பியவை நாயனார் நிகழ்ச்சியில் அமைந்து கிடத்தல் காண்க. . 118
பக்கம்:மணிவாசகர்.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை