பக்கம்:மணிவிழா வாழ்த்து.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயமரியாதை இயக்க மருந்து கொஞ்சம் கசப்பான மருந்து; அந்த கசப்பான மருந்தை இலையில் வைத்து, தேனையும் குழைத்து மக்களுக்குத் தந்த அந்தப் பெரும்பணியை பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எப்படியோ, மருந்து பெரியார் தந்த மருந்துதான்; அதிலே பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்த ஆற்றல் என்ற தேனும் கலந்த காரணத்தால் மருந்தை தமிழ்ச் சமுதாயம் உண்டது; அந்த மருந்துண்ட காரணத்தால் இன்றைக்குத் தமிழ்ச் சமுதாயம் நிமிர்ந்து நிற்கிறது; பீடு நடை போடுகிறது. தூண்கள் வலுவிலே தூண்கள் தூண்கள்தான். ஆனால் தூண்கள் ஒன்றையொன்று நெருங்கி நிற்பதில்லை. இங்கே கூடப் பார்க்கின்றீர்கள். இந்தப் பந்தலுக்கு அமைக்கப்பட்டிருக்கின்ற பந்தல் கால்கள் எல்லாம் தூண்கள்தான். ஆனால் நெருங்கி நிற்காத தூண்களை மாத்திரம் அமைத்துவிட்டு, நெருக்கமாக இருக்கின்ற கீற்று மேலே போடப்படாவிட்டால் உங்களுக்கு நிழல் கிடைக்காது. எனவேதான் தூண்களாகவும் இருக்கவேண்டும். அதே நேரத்திலே கீற்றுக்களை நெருக்கமாக இணைக்கின்ற பந்தலாகவும் அந்த கீற்றுகள் காற்றிலே ஒன்றோடொன்று மோதி அடித்து காற்றால் தள்ளப்பட்டுவிடாமல் ஒவ்வொரு கீற்றிலும் முடிச்சுபோடுகின்ற கயிறுகளாக நார்களாக நம்முடைய கழகத் தொண்டர்கள் இருந்திடவேண்டும். 31