பக்கம்:மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

龙 மண்ணியல் சிறுதேர் தோன்றுவான். நாடகம் வெற்றியடைய அவையோரின் ஆதரவும் பாராட்டும் தேவை. ஆதலால் அவையோரைத் தங்கள் பக்கம் இழுக்கும் விதத்தில் வணங்குவதும் :புகழ்வதும் நாடகச் சூத்திரதாரர்களுக்குரிய பழக்கம். 'கற்றறிந்தோர்', 'உயர்ந்தோர்', 'கலைச்சுவைமிக்கோர்' என்று அவையோரைப் புகழ்வர். 'அறிவாளிகள் நல்லதெனக் கூறவேண்டும். அதுவரை என் நாடக ஞானத்தைத் சிறந்ததெனக் கருதமாட்டேன்' என்று சாகுந்தல நாடகச் சூத்திரதாரன் அவையோரைப் புகழ் கிறான்; கவர்கிறான். இன்னும் ஒருபடி மேலே சென்று, இரத்தினாவளி நாடகச் சூத்திரதாரன், “இந்நாடகம்' சுவைஞர்களின் 'நெஞ்சையள்ளும்' என்று நிச்சயம் நம்புகிறேன். காரணம், இந்நாடகத்தை இயற்றிய ஹர்சர் தேர்ந்த கவிஞர்; இந்த அவை தகுதி மிகுதியுடையது; கதை கவர்ச்சிக்குரியது; நாங்களோ, நடிகர் திலகங்கள்' என்பான். மண்ணியல் சிறுதேரின் சூத்திரதாரன் சுருக்க மாக அவையோரைப் பெரியோர்கள் என்று விளித்து வணக்கஞ்செய்து நாடகத்தை நடத்த முயல்கிறான். சூத்திரதாரன்தான் வடமொழி நாடகங்களில் வரும் முதல் பாத்திரம் எனலாம். சூத்திரதாரன் நாடகம் பற்றிய

ஒரு காலத்தில் பொம்மலாட்டத்தை (கயிற்றைக் கையில் வைத்துக்கொண்டு) இயக்கியவன் சூத்திரதாரன் எனப்பட்டான். அவன், நாடகத்தை இயக்கத் தொடங்கிய பின்னரும் சூத்திரதாரன் என்றே அழைக்கப்பட்டான்போலும்.

Sutra, a threa; hence Sutradhara means one who holds the thread or the agent behind the puppet-shows. --R.V. Jagirdar, Drama in Skt. Lit. P.37.

  • As a matter of fact, in all the Sanskrit plays available, the first charactar to appear on the stage is Sutradhara. -

--R.V. Jagirdar, Drama in Skt. Lit. 45.