பக்கம்:மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றம் 5 பச்சைக்கற்பூரம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற்கூறியவாறு செய்ய வேண்டும். 5. கொழுப்பு மிகுதியாக இருப்பதற்கு குங்குமப்பூ, அதிமதுரம், சீயக்காய் ஆகியவற்றை வெந்நீர் விட்டு அசைத்து எடுத்து மேற்கூறியபடி செய்யவேண்டும். 6. வேண்டாத கிருமிகள் இருந்தால் இந்துப்பு, அரி தாரம், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து எடுத்து மேற் சொன்னபடி செய்யவேண்டும். மேற்கூறிய மருந்துகளை ஆண்களும் உடலுறவின்போது பயன்படுத்தி ஞல் நல்ல பயனுண்டு. - * 9) கருவுற்றதும் கவனிக்க வேண்டியவை யாவை? 1. கருப்பவதிக்கு மன நிம்மதி வேண்டும். 2. அவள் கடினமான வேலைகளே நீக்கவேண்டும். 3. மாதம் ஒருமுறை மருத்துவ ஆய்வு செய்யவேண்டும். 4. மாதம் ஒருமுறை எடை பார்க்க வேண்டும். இயற்கையாக இருக்கவேண்டிய எடைக்குமேல், மாதத்திற்கு இரண்டு பவுண்டு கூடி மூல். இபத்தக் கொதிப் பாவது சிறுநீரில் உப்புச்சத்தாவது இருக்கிறதா எ ன்று பார்க்க வேண்டும். இரத்தக் கொதிப்பு இருந்தால் அமைதியும் ஒய்வும் தேவை. உணவைக் குறைக்க வேண்டும். அடிக்கடி உலாவ வேண்டும். இதனை டாக்டர் பால்டேவிட் என்பவர் “EATLESS AND WALK REGULARLY” or org. குறிப்பிட்டுள்ளார். சிறுநீரில் உப்புச்சத்து அதிகமிருந்தால், உப்பை எவ்வளவு நீக்க இயலுமோ அவ்வளவு நீக்கவேண் டும். உப்புடன் முருங்கை இலையைச் சேர்த்து வறுத்து, அந்த வறுத்த உப்பைக் குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரவில் பார்லிக் கஞ்சி சாப்பிடுவது நல்லது.அதல்ை நீர் தாராளமாகப் பிரியும்;விக்கம் ஏற்படாது. எடை குறைதலும் உண்டு. எடை குறைந்து கொண்டே பேசனல் அதற்குக் காரணம் இரத்தக் குறைவு ஆகும்.