92 மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்
இன்னாசெய் தாரை யொறுத்தல் அவர்கான கன்னயஞ் செய்து விடல்
-திருக்குறள்; இன்னாசெய்யாமை : ! என்று சமுதாய நன்னிலைக்கு வழிகாட்டுகின்றார். சமுதாய உறுப்பினர்களுக்கு இருக்க வேண்டிய மற்றொரு அடிப்படைப் பண்பு ஒருவருக்கொருவர் கொடுத்து வாங்கி உதவிப் பல்லுயிர் ஒம்புதல். இதுவே அறிவின் பயனாாகும்.
பகுத்துண்டு பல்லுயிரோம்புத னுலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை
-திருக்குறள்; கொல்லாமை : 2
அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தந்தோய்போற் போற்றாக் கடை
-திருக்குறள்; இன்னாசெய்யாமை : 5
என்னும் குறட்பாக்களில் சமுதாய ஒருங்கிணைப்பின் உச்ச நிலையையே சுட்டிக் காட்டுகின்றார் திருவள்ளுவர். இவ்வாறு இன்றிச் சமூகச் சீரழிவுக்குக் காரணமாக அமைவனவற்றை, சமூக நோயாக அமைவனவற்றைக் குறிப்பிடும்போது,
காமம் வெகுளி மயக்க மிவைமூன்று நாமங் கெடக்கெடு நோய்
-திருக்குறள்; மெய்யுணர்தல் : 1.0 என்று காமவெறியும், வெகுளியும், மயங்க உயரும் மயக்க மும் சமுதாய நோய்கள் என்று சுட்டிக் காட்டுகின்றார். மயக்கத்தை நீக்கி.
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
-திருக்குறள்; மெய் உணர்தல் : 5
என்றவாறு ஒரு பொருளின் இயல்பான தன்மையை உணர வேண்டும் என்று திருவள்ளுவர் விளக்குகின்றார்.