முல்லைத்திணை 81
4. ஏறாண் முல்லை . மறக்குடியின் ஒழுக்கம் கூறுவது.
5. கணிவன் முல்லை : காலக் கணிதனுடைய திறத்தைப்
புகழ்ந்து சொல்லியது.
6. கற்பு முல்லை : 1. தலைவன் தலைவி நலத்தைப்
பாராட்டி உரைப்பது,
2. கணவன் பிரியினும் மகளிர்க்குரிதாய நிறை
காவலைக் கூறியது.
3. தலைவன் மனைவளத்தைத் தலைவி வாழ்த்துதல்.
7. கார் முல்லை : தலைவர் வினைமுற்றி மீளும் முன்னர்
முகில் நீரை முகந்து கொண்டு வந்தது கார் முல்லை.
8. காவல் முல்லை : 1. தவழ்திரை முழங்குந் தண்கடல் வேலிக் கமழ்தார் மன்னவனின் காவலை மிகுத்துக் கூறியது.
2. காவலியல்பினைத் தக்காங்குப் பிறர் எடுத்துக்
கூறுவதும் காவல் முல்லையாம்.
9. குடை முல்லை : மொய் தாங்கிய முழுவலித் தோட
கொய்தாரானின் குடையைப் புகழ்ந்து கூறுவது.
10. சால்பு முல்லை : வ ா ன் ேற ா யு ம் மலை யன்ன
சான்றோர்தம் இயல்பினைக் கூறுவது.
11. தேர் முல்லை : ஒன்னாரின் வலியை அடக்கி மீண்டு
வரும் மன்னரின் வருகையைக் கூறுவது.
மண்.-6