பக்கம்:மதன கல்யாணி-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 231

தான் யாவன் என்பதையும் சொல்ல மாட்டேன் என்கிறான். தான் அன்று இரவு இரண்டு மணிக்குத் தான் அந்த பங்களாவுக்குள் நுழைந்து அவளோடு சிநேகம் செய்து கொண்டதாக அவன் தாறுமாறாகப் பேசுகிறான். அவள் தான் மாத்திரம் தனிமையில் இருந்ததாகச் சொல்லிவிட்டு மூன்று மணிக்கு ஸ்மரணை தப்பிப் படுத்தவள் இன்னமும் எழுந்திருக்கவில்லை; டாக்டருடைய பார்வையில் இருந்து வருகிறாள். அந்த யெளவனப் புருஷனுக்கு வயது இருபதிற்கு மேலிராது; அவன் குள்ளமாகவும் கருப்பாகவும் மெலிந்தும் காணப்படுகிறான். முதுகு சிறிது கூனலாக இருக்கிறது. தலை மயிர் கிராப் செய்யப்பட்டிருக்கிறது. அவனுடைய மார்பில் மாம்பிஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு மச்சம் இருக்கிறது. தேனாம் பேட்டையில் உள்ள பங்களாக்களில் அவனை எங்கேயோ பார்த்திருப்பதாக சில போலிஸ் ஜெவான்கள் சொல்லுகிறார்கள். அவன் தேனாம்பேட்டையில் உள்ள யாரோ ஒரு ஜெமீந்தாரது வீட்டுப் பையன் என்று போலிஸார் சந்தேகித்து பல இடங்களிலும் விசாரித்து வருகிறார்கள். பாலாம்பாள் வாய் பேசும்படியான நிலைமைக்கு வந்தபிறகு, போலிஸார் அவளிடம் சரியான வாக்கு மூலம் வாங்கப் போகிறார்கள்.

-என்று எழுதப்பட்டிருந்த செய்தியை சிவஞான முதலியார் தணிவான குரலில் தெளிவாக வாசிக்க, அதைக் கேட்ட கல்யாணி யம்மாளது நிலை கலங்கியது. மூளை குழம்பியது. குலை நடுங்கியது. கை கால்கள் வெடவெட என்று ஆடியது. அந்தச் சயன மாளிகையும் அதற்குள் இருந்த பொருட்களும் சுழன்று ஆகாயத்தில் கிளம்புவன போலத் தோன்றின. அது கனவோ நினைவோ என்று சந்தேகித்து அவள் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள். வாய் குழறியது; தேகம் பதறியது; வெட்கமும் துக்கமும் பொங்கி வளைத்து அவளது எண்சாண் உடம்பையும் ஒரு சாணாகச் சுருக்கின. அவ்வாறு அவள் உணர்வு தடுமாறி இருந்த போது, சிவஞான முதலியார், “என்ன அம்மா! படித்ததைக் கவனித் தீர்களா? இதில் குறித்திருக்கும் யெளவனப் புருஷன் யா என்பதை நீங்கள் சொல்லக்கூடுமா?” என்று கேட்க, அதற்குள் சிறிது தெளிவடைந்த கல்யாணியம்மாள், “இதில் சந்தேகம் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-1.pdf/249&oldid=649727" இலிருந்து மீள்விக்கப்பட்டது