பக்கம்:மதன கல்யாணி-2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

468 மதன கல்யாணி

மாரமங்கலம் ஜெமீந்தாருடைய மூத்த புத்திரியான துரைஸாணி யம்மாள் என்ற பெண்ணை உங்களுடைய மூத்த குமாரருக்குக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் பிரஸ் தாபித்த விஷயத்தில் மாரமங்கலம் ஜெமீதாரிணியம்மாளிடத்தி லிருந்து இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர்கள் இந்தக் கலியாணத்துக்கு இணங்கி விட்டதாகவும், முகூர்த்தப் பத்திரிகை வாங்கிக் கொண்டு போக மனிதரை அனுப்பும்படி யாகவும் எழுதி இருக்கிறார்கள்.

அந்த விஷயத்தில் ஒரு ரகசியமான சங்கதியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதியவசியமாக இருக்கிறது. மாரமங்கலத் தாருடைய பங்களாவில் மோகனரங்கன் என்ற ஒர் அழகான யெளவனப் புருஷன் இருக்கிறான். துரைஸானியம்மாள் என்னும் அந்த பெண், அந்த வடிவழகனிடத்தில் அபாரமான மோகங் கொண்டு அதே பைத்தியமாக இருப்பதன்றி, அவனைத் தவிர, வேறு எவனையும் கலியாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மறுத்துவிட்டாள். இன்று பகலில், அந்தப் பையனும் பெண்ணும், அவளுடைய அறையில் தனியாக இருந்த சமயத்தில், ஜெமீந்தாரி ணியம்மாள் அதை நேரில் கண்டு, பெண்ணைக் கண்டிக்க, பெண் வீட்டை விட்டே ஓடிப்போகிறேன் என்று சொல்ல, அதன்மேல் அந்த அம்மாள் பயந்துகொண்டு, பெண்ணை அறைக்குள் வைத்துப் பூட்டி பையனையும், அந்த பங்களாவை விட்டு எங்கேயோ அனுப்பிவிட்டார்கள். அந்தப் பெண் தன்னுடைய உயிர் போவதானாலும், அந்த மோகனரங்கனைத் தவிர, வேறொருவனைக் கலியாணம் செய்து கொள்ளக் கூடாதென்றும், வற்புறுத்தினால், ரகசியமாக ஒடிப்போவதற்கும் உறுதி செய்து கொண்டிருக்கிறாள். நீங்கள் நாளைய தினமே ஒரு மனுஷ்யனை ரகசியமாக அனுப்பிப் பார்த்தால், பெண்ணைச் சிறையில் வைத் திருப்பது தெரியும். பெண்ணினிடத்தில் பேசிப் பார்த்தாலும் அவள் உண்மையை வெளியிட்டு விடுவாள். ஆகையால் நீங்கள் உடனே மனுஷ்யாளை அனுப்பி விசாரித்துப் பார்த்துக் கொண்டு, உங்களுடைய முடிவைத் தெரிவியுங்கள். அவசரப்பட்டுக் காரியம் செய்வீர்களானால், உங்களுக்கு அவமானமும் பணச்செலவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/172&oldid=645940" இலிருந்து மீள்விக்கப்பட்டது