பக்கம்:மதன கல்யாணி-2.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197

பேசினார்கள் என்பது நிச்சயமாகி விட்டது; நான்று நேற்று அங்கே இருந்து வந்தவுடனே அவர்கள் என்ன செய்தார்களாம்; உடனே அவர்களுடைய துர்மந்திரியான பொன்னம்மாளைப் பிடித்து ஆலந்துருக்கு அனுப்பினார்களாம்; அம்பட்டக் கருப்பாயியை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்களாம்; இன்றைய இரவுக் குள் அவளாவது கட்டையன் குறவனாவது வந்து பாலாம்பா ளுடைய பங்களாவுக்குள் நுழைந்து அந்தப் பத்திரத்தை அபகரித்துக் கொண்டு வந்து கொடுத்துவிட வேண்டும் என்று அவளிடத்தில் முடிவு கட்டி அதற்காக ஏராளமான பணம் கொடுத் திருக்கிறார்களாம். என்னுடைய தாயார் என் விஷயத்தில் இப்படிப் பட்ட இரண்டகம் செய்திருப்பதைக் கேட்க, என் மனம் பதறுகிறது; என் உடம்பு துடிக்கிறது; நல்ல வேளையாக, இந்த விஷயம் எனக்குச் சரியான காலத்தில் எட்டியது; அவர்கள் இந்தக் கட்டையன் குறவனேயன்றி அந்த ஈசுவரனையே அனுப்பி னாலும் அவர்களுடைய கெட்ட எண்ணம் நிறைவேறாதபடி தடுத்துவிட ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் அனுபவிக்கும் பரமானந்த சுகத்தைக் கெடுக்க எத்தனிக்கும் மனிதர் எவராக இருந்தாலும், அவர்கள் எனக்குத் தீராப் பகைவர்கள் தான்; அவர்களுக்கு நான் என்னாலான தீங்கைச் செய்தே தீருவேன்.

நேற்று காலையில் நான் என்னுடைய அம்மாளிடத்தில் பேசி விட்டு வரும் போது, தெய்வச் செயலாக இன்னொரு புதிய விஷயம் எனக்குத் தெரிந்தது. அந்த விஷயத்தைக் காண, அப்படியும் நடக்குமா என்ற வியப்பும் திகைப்பும் என் மனசில் குடிகொண்டன. பாலாம்பாளுக்கு, விலையுயர்ந்த நல்ல சேலை களும், ரவிக்கைகளும் கொணர்ந்து கொடுக்க வேண்டும் என்று இரண்டொரு நாளாக என் மனசில் ஆசை உண்டாயிற்று; ஒவ்வொன்றும் ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் பெறக்கூடிய எண்ணிறந்த சேலைகள், அம்மாளுடைய உடுப்புப் பெட்டிகளில் இருக்கின்றன; அவைகளில் முதல் தரமானவைகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு நான் உடுப்புப் பெட்டிகளிருந்த அறைக்குள் நுழைந்து முன்னாகவே நான் தந்திரமாக அபகரித்து வைத்துக் கொண்டிருந்த திறவுகோல்களை எடுத்துப் பெட்டிகளை எல்லாம் திறந்து எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/201&oldid=645997" இலிருந்து மீள்விக்கப்பட்டது