பக்கம்:மதன கல்யாணி-2.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 243

துரைராஜா:- அநேகமாக, நானே வெள்ளைக்காரருடைய போஜன சாலைக்குப் போய் திருப்தியாகப் போட்டுக்கொண்டு வந்து விடுவேன்; அதோடு இங்கே வரவழைப்பதும் உண்டு.

செட்டியார்:- சரிதான்; ஆனால் அந்த வெள்ளைக்காரர்களுடைய சாமான்கள் எல்லாம் அபாரமான விலையுள்ளவைகள் ஆயிற்றே: உங்களுடைய பெரிய தகப்பனார் அனுப்பும் சொற்பத் தொகையை வைத்துக் கொண்டு, நீங்கள் இத்தனை செலவுகளை யும் எப்படிச் செய்து வருகிறீர்கள்?

துரைராஜா (மிகவும் பெருமையாக நிமிர்ந்து) என்ன செய்கிறது: பெரிய தகப்பனார் அனுப்புவது விஸ்கி பாட்டில்களுக்குக் கூடக் காணாது; அத்தையம்மாள் கொஞ்சம் கொடுப்பார்கள் அவர் களுக்குத் தெரியாமல் அவர்களுடைய பெட்டியைத் திறந்து நகைகளை எடுத்து விற்பதுமுண்டு; மைனரிடத்தில் இனாமாக வாவது, கடனாகவாவது வாங்குவதுமுண்டு; என்னிடத்தில் சிநேகமாக இருக்கும் ஸ்திரீகளிடத்தில் ஆயிரம் இரண்டாயிரம் பெறும்படியான உயர்ந்த நகைகள் இருந்தால், அவர்களை ஏமாற்றி அதை அபகரித்து விடுவதும் உண்டு; இந்த வழிகளில் எதிலும் பணம் கிடைக்காவிட்டால், மைனரோடும், இன்னம் சிலரோடும் சேர்ந்து, ரங்குபர்லா என்ற சீட்டாட்டம் ஆடி, அதனால் ஆயிரம், ஐந்நூறு சம்பாதித்து விடுவேன்; என்ன செய்கிறது! நமக்கோ சிற்றின்பப் பிரியம் அதிகம்; பணச் செலவோ அபாரமானது; நியாயமான வழியில் வருமானமோ பூஜ்ஜியம்; அதற்காக, இந்த மாதிரி பலவகையான தந்திரங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. இப்போதுகூட, எனக்கு ஐயாயிரம் ரூபாய் நிரம்பவும் அவசரமாகத் தேவையாக இருக்கிறது. நான் போய்க் கேட்டால் என்னை நம்பிக் கொடுக்கக்கூடியவர்கள் ஒருவரு மில்லை; அதற்கு என்னவிதமான தந்திரம் செய்யலாம் என்று ராப்பகலாக யோசனை செய்து கொண்டிருக்கிறேன் - என்றான்.

அதற்குள் அவர்களது சாப்பாடும் முடிவடைந்தது. இருவரும் எழுந்து கையலம்பிக் கொண்டு, வேறொரு மேஜையண்டையில் போய் உட்கார்ந்து தாம்பூலம் தரித்துக் கொண்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/247&oldid=646085" இலிருந்து மீள்விக்கப்பட்டது