பக்கம்:மதன கல்யாணி-2.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 67

அடித்து விடுவேன்’ என்று பயமுறுத்தினார். நான் அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு பெரிய மனிதனாயிற்றே என்று மரியாதை பார்த்தேன்; அன்றிரவு நானும் இவரும் தனியாகப் படுக்கை அறையில் இருந்தோம் என்பதை அறிந்தே, இந்த மனிதர் ஏதோ ஏற்பாடு செய்திருக்கிறார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது; ஆனால் இந்த மனிதர்தான் நிச்சயமாகச் செய்தார் என்று நான் மெய்ப்பிக்க முடியாது; அப்படி இருக்கலாமோ என்ற சந்தேகம் மாத்திரம் உண்டாகிறது” என்றாள்.

அவள் சொல்லி வாய்மூடும் முன் அந்தக் கிழவன் மூர்ச்சித்து, வேரற்ற மரம் போலப் படேரென்று கீழே விழுந்து விட்டான். போலீசாரில் சிலர் குபிரென்று பாய்ந்து அவனை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்குள் போயினர். அதன் பிறகு சப் இன்ஸ்பெக்டர் எங்களைப் பார்த்துப் போக அனுமதி கொடுக்க, நானும் பாலாம்பாளும் நாடகக்காரக் கிழவனுடைய மோட்டார் வண்டியிலே ஏறிக்கொண்டு அவளுடைய பங்களாவுக்குப் போய் அவளுடைய சயன மாளிகையை அடைந்தவுடனே, அவள் நிரம்பவும் ஆசையாகவும் சந்தோஷமாகவும் ஓடிவந்து என்னைக் கட்டிக்கொண்டு, “எப்படி இருக்கிறது. நான் செய்த தந்திரம்?” என்றாள். அடடா! அப்போது எனக்குண்டான ஆனந்தத்தை நான் என்னவென்று சொல்லுவேன்! அதற்கு மேல் அங்கே நடந்த சங்கதிகளை எல்லாம் உங்களிடத்தில் சொன்னால், நீங்கள் பொறாமைப்படுவீர்கள். ஆகையால் அவைகளை வெளியிட எனக்கு இஷ்டமில்லை. என்னைத் தப்பவைக்கிறதற்காக இப்படிப் பட்ட அபாரமான தந்திரம் செய்து, இதுவரையில் கண்ணுக்குக் கண்ணாக இருந்த அந்த மனிதனை ஒரு நொடியில் விலக்கிவிட்ட வளான அந்தப் பெண் என்னிடத்தில் உண்மையான பிரியம் வைக்கமாட்டாள் என்று யாராகிலும் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னாலும் அதை நான் கேட்கப் போகிறதில்லை - என்றான். அதைக் கேட்ட கல்யாணியம்மாள் திகைப்பும் வியப்பும் அடைந்தவளாய் என்ன மறுமொழி கூறுவதென்பதை அறியாத வளாய் சிறிது நேரம் மெளனமாக இருந்து பிறகு மைனரை நோக்கி, ‘தம்பி பார்த்துக் கொண்டாய் அல்லவா அவளுடைய யோக்கி யதையை? அவள் தனக்குப் பிரியம் இருக்கும் வரையில் ஒருவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-2.pdf/71&oldid=646323" இலிருந்து மீள்விக்கப்பட்டது