பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கை 1


மூடநம்பிக்கை என்றால் என்ன?

மூடநம்பிக்கை என்றால் என்ன ?

சான்று கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒன்றை நம்புவது!

ஒரு அதிசயத்றிற்கு மற்றொரு அதிசயத்தைக் காரணங் காட்டுவது!

உலகம் அதிர்ஷ்டத்தால் அல்லது அந்தராத்மாவால் ஆளப்படுவதாக நம்புவது!

காரணத்திற்கும் காரியத்திற்கும் உள்ள உண்மைத் தொடர்பை அலட்சியப்படுத்துவது!

எண்ணத்தை, நோக்கத்தைக், குறிக்கோளை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வைப்பது!

மனமானது பொருளை உற்பத்தி செய்கிறது, அதனை அடக்கி யாண்டுவருகிறது என்று நம்புவது!

பொருளை விட்டுவிட்டு ஆற்றலை மட்டும் நம்புவது: அல்லது ஆற்றலை விட்டுவிட்டுப் பொருளை மட்டும் நம்புவது!