பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூடநம்பிக்கை என்றால் என்ன ?

39


அதிசயச் செயல்கள், மந்திரங்கள், செபங்கள், கனவுகள், ஜோஸ்யங்கள், குறிகள் ஆகியவற்றை நம்புவது!

இயற்கைக்கு மீறிய ஆற்றலை நம்புவது!

மூடநம்பிக்கைக்கு உண்மையான அடிப்படை, அறி நம்பிக்கையின்மீது அதன எழுப்பப்படுகிறது; வெறும் ஆவல் அதன் கும்பமாகும். மூட நம்பிக்கை - அறியாமையின் குழந்தையாகும்; துன்பத்தின் தாயாகும்

கிட்டத்தட்ட எல்லோருடைய மூளையிலும் மூட நம்பிக்கை என்னும் புகைப்படலம் படர்ந்திருக்கவே செய்கிறது.

தட்டுகளைத் துடைத்துக்கொண்டிருக்கிற ஒருத்தி, துடைக்கும் துணியைத் தவறிக் கீழே விட்டுவிட்டால், அவள் உடனே கூறுகிறாள். "இன்று விருந்தினரின் கூட்டம் வரும்" என்று.

துணி கீழே விழுவதற்கும். விருந்தினர்கள் வருவதற்கும் நேரடியான தொடர்பு எதுவும் இல்லை என்பதைப் பெரும்பாலான மக்கள் ஒத்துக்கொள்ளவே செய்வர். கீழே துணி விழும் தன்மை, எங்கேயோ இருக்கின்றவர்கள் உள்ளத்தில், இங்கே வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தை எவ்வகையிலும் உண்டாக்க முடியாது என்பதைப் பலரும் உணர்வர். துணியைக் கீழே போட்ட குறிப்பிட்ட ஒருத்தியைப் பார்க்க, வருகை தரவேண்டும் என்ற விருப்பத்தை, மற்றவர்கள் உள்ளத்தில் எப்படி ஒரு துணி எழுப்பமுடியும் ? கீழே துணி விழுவதற்கும், பின்னால் நிகழப்போகிற நிகழ்ச்சிகளுக்கும் நடைபெறக்கூடிய தொடர்பு, உறுதியாக, ஒன்றும் இருக்க முடியாது.

ஒரு மனிதன், தற்செயலாகத், தன் இடது தோள் மேலாகத் திங்களைப் பார்க்கிறான் என்றால், அவன் உடனே கூறுகிறான், "இது எனக்குத் துர் அதிர்ஷ்டம்" என்று.