பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மதமும் மூடநம்பிக்கையும்


திங்களை இடது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது வலது தோள் மேலாகப் பார்ப்பதோ அல்லது அதனைப் பார்க்காமல் இருப்பதோ திங்களை எந்தவிதத்திலும் பாதிப்பதுமில்லை; உலகிலுள்ள பொருளிடத்துத் திங்களுக்குள்ள ஆக்கத்தையோ அல்லது ஆதிக்கத்தையோ எந்த விதத்திலும் மாற்றப்போவதுமில்லை இடது தோளின் மேலாகப் பார்வையைச் செலுத்துவது, பொருள்களின் இயற்கைப் பண்புகளை, உறுதியாகப் பாதிப்பதில்லை இடது தோளின் மேலாகத் திங்களைப் பார்ப்பவனின் வாழ்க்கையில், சாதாரணமாக ஏற்படக்கூடிய கெட்ட நிலை மைகளுக்கும், இடது தோளின் மேலாகப் பார்ப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை நாம் நன்கு அறிகிறோம்.

ஒரு பெண், ஒரு பூவிலுள்ள இதழ்களை எண்ணுகிறாள்; எண்ணும்போது, "ஒன்று, அவன் வருகிறான; இரண்டு, அவன் பார்க்கிறான்; மூன்று, அவன் காதல் புரிகிறான்: நான்கு, அவன் மணம் செய்கிறான்; ஐந்து, அவன் போய் விடுகிறான்" என்று சொல்லுகிறாள்.

உறுதியாக அந்தப் பூ, அந்தப் பெண்ணினுடைய காதலைப் பொறுத்தோ, அல்லது அவளது திருமணத்தைப் பொறுத்தோ, குறியாகக் கொண்டு வளரவில்லை; அதிலுள்ள இதழ்களும் அவைகளைப் பொறுத்து அறுதியிடப்படவில்லை; அவள் அந்தக் குறிப்பிட்ட பூவைப் பறிக்கும் போது, எந்த 'அறிவும்' அவள் முன்வந்துநின்று, அவள் கைக்கு வழிகாட்டியாக அமைவதில்லை. அதுபோலவே, ஒருவரு டைய எதிர்காலம் இன்பகரமாக இருக்குமா, துன்பகரமாக இருக்குமா என்பதை, ஒரு ஆப்பிள் பழத்திலுள்ள விதைகளின் எண்ணிக்கை அறுதியிட்டுக் கூறாது.