பக்கம்:மதிவாணன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இவ்வாறிவர்கள்மொழியக் கேட்டு கின்ற முருகன் சேய்மைக்கண்ணே யொருவன் முன்னர் விரைந்தோடு தலையும் அவனேப் பிடிப்பா னிருவர் பின் னர்ச் செல்லுதலையுங் கண்ணுற்று அருகினின்ற காவல ரிருவரையுந்தன்னெடு கடுகி வருமாறு சொல்லிவிட்டுத் தனதுகலிமாவினைத் துனேவிற் செல்லும் வண்ணங் தூண்டிச்சென்றனன்.

இஃதிவ்வாருக, பறையர் கோலத்தோடு மோடிப்போன மாயவன் மாடக்குளத்தினிறங்கி மடைப்புழையிற் புகுந்து மதகினீர்தாங்கும் ஒவின்ே ழொளித்துக்கொண்டனன். பின்பற்றிச் சென்ற காவலரோ இதனை யறியகில் லாது தவித்தனர். அவ்வயிற் சுற்றிச் சுற்றிவந்தனர்; இவ்வழியினேயே யவன் போந்தனன்; அதற்குளவன் யாங்கனம் மறைந்து விட்டனன்? இஃதென்னே விந்தை' என்றுரைத்து உளங்கவலா நிற்புழிமுருகனும் மற்றைய காவல ரிரு வரும் போத்தனர். உடனே முருகனும் அவர்தமுளிருவரை மடையின் மறு புறத்து நிறீஇ யொருவனே மடைப்புழையுள் நூழைந்து தேடுமாறேவி மற் ருெருவனுக் தானுமாய் மாயவைெளித்துக் கொண்ட புறத்தே கின்றனர்.

சிறிது நேரத்திற் கெல்லாம் மடைப்புழையின் கண்துழைந்து மாய வனே நேடிய சென்ற காவலனுடலம் வெளியே போந்து விழுந்தது; யாவரு மதன யுற்றுநோக்கிச் சென்ற காவல னிறந்து விட்டன னென்றெண்ணி யுளங்கவன்றனர். - *

இதற் கிடையின் முருகன் நெடிய தோரிருப்புச்சலாகை தருவித்து அதனே மடையினுட் செலுத்திக் குத்துவான் புக்கனன். புக்களவில் உள்ளி ருந்த மாயவன் மடையின் மறுபுறஞ் சென்று வெளியேறினன். உடனே யாண்டு அவனே யெதிர்பார்த்து கின்ற காவலரிருவரும் ஒய்யெனக்கூய் அவன் மேற் பாய்ந்து பற்றலும் அவன் இவர்களைப் பொட்டெனக் கதுப்பினிற்புடை த்து மல்லினிற் கொண்டு பிடித்துப் போர் புரிந்துழிக் காவலைெருவன் காலொடிந்து வீழ்ந்தனன்.

இத்துணையும் கிகழ்தலை மடையி னிப்புறத்திருந்து கண்ட முருகன் காவலனெடுஞ் சென்று பற்றப்புகுதலும் மற்போர் கின்றது ; மாயவன் தலை குனிந்தனன் ; உடனே முருகனும் மாயவனே கோக்கி என்னே! மாயவ! என்னையுன் னற்றல் எம்மனைவரையு மின்னணம் வருந்துமாறு வைத்தனேயே இதன்காரணம் யாது கொல்ரி வாய்கிறந்துரைத்தி' என்று வினயினன். வின வலும் மாயவனென்றும் பேசிலன்.

அஃதுணர்ந்து முருகனும் அவனைப் பற்றித் தளையிறுமாறு கட்டளை யிட்டனன்; இட்டது கேட்ட மாயவன் என்னத் தளையிடுவோன் ேேயயோ? புல்லறிவாள்!" என்று கூறி முருகன்மேற் பாய்ந்தனன்; பாய்தலும் பக்கத்திரு. ந்த காவலர் மாயவனைப் பற்றிப் பிடித்து அவன் கைகால்களில் யாப்பிட்டனர். அங்ஙனம் பிடியுண்ட மாயவன் சிறைக் கோட்டத்திடப் பெற்ருன்; மற்று, அரண்மனை மாடமீ மிசை மன்னவகுெடுஞ் சென்ற மதிவாணன் பாண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/45&oldid=656040" இலிருந்து மீள்விக்கப்பட்டது