பக்கம்:மதுரைக்கோவை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதுரைக்கோவை:

லருளா யெனக்கணியாந்தழைபாடிடமான வெல்லா மிருளார்கெடுங்குழலாயுங்கணாட்ட வியம்புதியே.

அவற்குத் தன்னாட்டணியியல்பாங்கிசாற்றல்,

மாந்தர்வியக்குமதியான்மதுரை மணிச்சிலம்பிற் காந்தளம் பூவெங்கருக்குழற்பூசந்தனம்கலந்த சாந்தமெஞ்சாந்தமெழின் மாந்தழையெந் தழையிறைவா தேந்தளம்புன்னைநறுநிழலாடுந் திருத்தலமே.

இறைவிக்கிறையோன் குறையறிவுறுத்தல்,

கள்ளார்கருங்குழலாய்நின்னெழின்முகங்காண்பதற்குப்

புள்ளாந்தொடைசேர்புயத்தான் மதுரைப்பொருப்பினின்று

தொள்ளாயிரவர்கரங்கொண்டுழற்றெரிசூட்களுக்கும் விள்ளாநிறைநள்ளிருள்வரக்காதலர்வேண்டினாே.

நோர்திறைவி நெஞ்சோடுகிளத்தல்,

மல்லார்புயத்தன் மதுரரையங்கோன்லெற்பர்வம்மினென்று கல்லார்சிறுசெறிசூருமுலா வருங்கண் மழுக்க வில்லார்காத்தின ரீட்டியாராம்வனவேடரெல்லாஞ் சொல்லாதிரியுமிருள் கண்டுமெங்ங்னஞ்சொல்லுவதே.

நேரிழைபாங்கியோடுநேர்ந்துரைத்தல். பொருளே விரும்பியும்போற்றியும்பாராப்புகழுடையானருளை விரும்புமதுரையங்கோன்வெற்பார்குழலா மிருளை விரும்பியிருப்பவராகலினென்னைகொல்லோ தெருளை விரும்பியவர்க்கினியாமொன்று செப்புவதே.

நேர்ந்தமைபாங்கிநெடுந்தகைக் குரைத்தல்,

சீருமருளுக்திகழ்கோன் மதுரைநற்சென்னையன்ன வாருமணிவடமுஞ்சேரிளமுலைமாட்டுவைகி யாருமலியிருள்வாய்வாநேராலவண்மனதை நேருமளவிரந்தேன் கமழ்கிண்டோணெடுந்தகையே,

குறியிடைநிறீஇத்தாய்துயிலறிதல். துடித்துப்பறியப்பகைதொலைப்போன் மதுரைமுதுநூல் படித்துப்பழகுமவரைவாய் நறும்பைந் தழைக - ளொடித்துக் கொணருங்கறையடிவேழமங்குற்றதுகொல் லடித்துச்சிறகிளமஞ்ஞைஞரல்கின்றவாரணங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதுரைக்கோவை.pdf/38&oldid=1359719" இலிருந்து மீள்விக்கப்பட்டது