பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மதுரைக் குமரனர் தர வில்லியான நிஷதராஜனேன்” (P. S. 342) என்று. கல் வெட்டித்தந்துள்ளான். தெற்றன் அரசர்கள் அஞ் சப்பிறந்தானை கடம்பராயன் என்னும் வேருெரு தலை, வன், தன் பெரு வேந்தனை சுந்தர பாண்டியன் (கி. பி. 1282) பிறந்த நாளான ஆவணி உத்திரத் திருங்ாளில், தீர்த்தமாக உத்தமப்படி ஒன்பது நாள் எழுந்தருளவும், ஆட்டைத் திருப்பவுத்திரம் சாத்தியருளவும் ' (P. S. ins, 304) திருநலக்குன்றமுடைய நாயனுர்க்கு கிவந்தம் விட்டு அந்நாளைச் சிறப்புறக் கொண்டாடினன். இவ்வண் ணம் இடைக்காலத் தமிழ்ச் செல்வமக்கள் தங்கள் பிறந்த நாளையும் தங்கள் தலைவர் பிறந்த நாளையும் சிறப்புறக் கொண்டாடின செய்தி இந்நாட்டின் மட்டுமன்றித் தமிழக முழுதும் நிலவியிருந்தது. மேலும், இவர்கள் தங்களைப் பாதுகாத்துப் புரந்த தலைவர்கள் பணித்த பணிமேற்கொண்டு த்ங்கள் நன்றி யறிவு விளங்கக் கோயில் திருப்பணிக்காக ஊரும் நிலமும் விட்டிருப்பது நன்கு குறிக்கத்தக்க தொன்ரும், கி.பி. 1168-1178 வரை ஆட்சி புரிந்த இராசாதி ராசன் காலத் தில் குலோத்துங்க சோழக் கடாரத் தரையன் என்ருெரு தலைவன் இக் கோனுட்டில் இருந்தான். இவனே இளமை யில் போன்புடன் பேணிப் புறங்தந்து ஞானம் தந்தவன் போதம் சீபுயங்க தேவன் என்போனவன். இப்புயங்க தேவன் தன் இறுதி நாளில் இக் கடாரத் தலைவனே நோக் கிப் புன்னங்குடியில் இராசேந்திர சோழன் தன் பெய ரால் எடுப்பித்த சிவன் கோயிலுக்கு கிலம் வழங்குமாறு பணித்திருந்தான். அவன் பணியை முடியில் தாங்கி அவன் தன்னைப் பேணிய பெட்பை நினைந்து, அவன் பால் தனக்கிருந்த நன்றி யுணர்வு மிகுதலால், புன்னங்குடி புள்ள இராசேந்திர சோழிச்சுரமுடைய நாயனர்க்கு... ஒரு குடிக்காடு விடவேண்டுமென்று என்னை ரக்ஷித்த சிர் ப்ரிதம் பூ புயங்க தேவர் கிருவாய் மலர்ந்தருள........ கொடுத்தேன் சதுரன் இராசனை குலோத்துங்க சோழக் கடாரத் தாையனேன்” (P. S. ins, 141) என்று விளம்பி யுள்ளான்.