சித்தாகள் 31
கல்லு, வெள்ளி, செம்பு, இரும்பு என்று இதனாலே விக்கிரகங்களைப் பண்ணி வைத்துக்
கொண்டு
வல்லதேவ ரூப பேதம்
அவரவர்களுக்கு விருப்பமான வடிவங்கள் அமைத்துப் போற்றிவிட்டால்
தொல்லையற்றி டப்பெருஞ் சுகந்தருமோ சொல்லுவீர்
இதை வழிபட்டுவிட்டதனாலே, இதற்கு ஏதோ பொங்கல் முதலானவற்றைப் படைத்துவிட்டதனாலே ஒரு நிலையை அடைய முடியும் என்று நினைக்கிறீர் களா?
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசனாணை இல்லையே.
என்பார் சித்தர்.
மகனே தங்கத்திலும், வெள்ளியிலும் பண்ணி வைத்து வழிபட்டுவிட்டதனாலே ஏதோ கிடைத்து விடும் என்று நினைக்காதே. ஈசன் ஆணை இதனாலே எந்தப் பயனையும் நீ அடைய முடியாது' என்று பேசுவார்.
"இப்படிப் பேசுகிறார்களே, இவர்கள் ஏதோ எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவியாக ஓடிவிட வேண்டுமென்று - இடைக்காலத்திலே போலித் துறவு வந்ததே - சித்தர்கள் இதைத்தான் வரவேற்கிறார்களோ என்று தயவு செய்து நினைத்துவிட வேண்டாம். எப்படி வள்ளுவப் பேராசான் இல்லறத்தைப் போற்றினாரோ அதேபோல சித்தர்களும் போற்றியிருக்கிறார்கள்.