பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்


ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியக் காலத்தில் பல்வேறு மக்களிடையே இருந்த பழக்க வழக்கங்களையும்-மரபுகளையும் காண்பாம்.

மலர் வனம் புக்க காதை

கடவுளர்க்குத் தூய மலர்

கடவுளர்க்குச் சூட்டும் மலர் தூயதாயிருக்க வேண்டும் என்பது ஒருவகை மரபு. மலர் கொய்து போடும் போதும் போட்ட பின்னரும் மலர்க் குடலையை இடுப்பின் கீழ் தொங்கவிடக் கூடாது என்பர். குளிக்காமல் மலர் கொய்யக் கூடாதென்பதும் ஒரு கொள்கை. மணிமேகலை மலர் தொடுத்த போது, தந்தை கோவலனை எண்ணி அழுத கண்ணிர் மலரில் பட்டுவிட்டதால் வேறு மலர்கள் கொய்து வரும்படி மாதவி மணிமேகலையை மல்ர் வனத்திற்கு அனுப்பினாளாம்.

“மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்
புலர்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுரீ ராட்ட
மாதவி மணிமேகலை முகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையின் கண்ணிர் மாற்றித்