பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 அப்பாலோர் மரக்கிளையில் ஓந்தி கண்டேன் அழகொழுகும் பச்சையொடு சிவப்பு மஞ்சள் இப்பாலே கருவண்ணம் காட்டிக் காட்டி இமைப்பினிலே நிறமாறும் விந்தை கண்டேன் : அப்பாவி மக்களிடை மாறி மாறி அரசியலில் நிறமாறும் மாந்தர் செய்கை செப்பாமற் செப்புவதை நானு ணர்ந்தேன் விந்தையெலாம் மிகவுளைந்து திரும்பி விட்டேன். வண்ணங்கள் பலபூசிப் பகலோன் வானில் வடிவழகு செய்கின்ற மாலை வேளை எண்ணங்கள் சுழன்றாட நடந்து சென்றேன்; இசைகலந்த சொன்மாரி பொழியக் கேட்டேன்; வண்ணமிலான் வடிவமிலான் இறைவன் என்பர் மங்கைக்குப் பங்களித்த கடவுள் மேனி வண்ணத்திற் சரிபாதி கருப்பு, மற்றை வடிவமெனும் ஒருபாதி சிவப்பாம் ' என்றார். கருப்புநிறம் சிவப்புநிறம் கலந்த மேனிக் கடவுளவன் தென்னாட்டுக் குரியன் என்றார்; விருப்பமுடன் செவியேற்ற என்றன் சிந்தை விடுதலையில் அரசியலில் விரைந்த தங்கே: கருப்புடனே சிவப்புநிறம் கலந்து வானில் காட்சிதரும் இருவண்ணக் கொடியே இங்கும் பொறுப்புடனே தென்னாட்டுக் குரிய தாகும் புகுந்தவையே பிறவெல்லாம் எனநி னைந்தேன்.