பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஆதலினால் எப்பிழைக்கும் ஆளாகிப் போகாமல் தீதறியா நல்லோரைத் தேர்தலிலே கண்டறிக! சாதி சமயமென்று தாழ்வுயர்வு சாற்றுதலை மோதித் தகர்த்தெறியும் முன்னேற்றப் பண்பினரை! மு) ஏழைமையைப் போக்கி இனிமைமிகும் வாழ்வுதரும் தோழமையை நெஞ்சில் துணையாகக் கொண்டவ/ைஇ செந்தமிழின் ஆக்கஞ் சிதையாமல் காப்பவரை, நொந்திருக்கும் நாட்டவரின் நோவைத் தணிப்பவரை, கற்றவரைத் தந்நலங்கள் அற்றவரை மெய்யொன்றே சொற்றவரைத் தூயவரைத் தொண்டுள்ளம் பெற்றவரை நன்றாய்ந்து தேர்ந்தெடுத்து நாடாளச் செய்வோமேல் நன்றாக வாழும் நம் நாடு.