பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 குண்டுமழை பொழிந்தாலும் தமது மெய்கள் குருதிமழை பொழிந்தாலும் கலங்கா வுள்ளங் கொண்டெழுந்த வங்கத்தார் அஞ்சா ராகிக் கொடுங்கோலர் கொட்டத்தை எதிர்த்து நின்றார்; பெண்டிழந்தார் மகவிழந்தார் வீடி ழந்தார் பெருமான மட்டுமவர் இழக்க வில்லை ' கண்டிடுவோம் உரிமைபெறும் வங்க தேசம் # காத்திடுவோம் ' என்றெழுந்தார் சிங்க மாந்தர் */ தூண்டிவிடும் அமெரிக்கர் சொல்லை நம்பித் தூண்டிலுறும் புழுவான பாகித் தானம் தாண்டியது நீதிதனை ; வெறியின் வேகம் தலைக்கேறி ஆடியது; தேர்தல் நாளில் வேண்டுமிவர் என மக்கள் வாக்க ளிக்க வென்றுவரும் ரகுமானை வஞ்சப் பேச்சால் கூண்டதனில் அடைத்துவிட்டு மேடை ஏறிக் கொக்கரித்தான் அறப்போரை அறியா வீரன் முறையற்ற செயலிதுவென் றுலகை நோக்கி முறையிட்டோம் மனமுள்ள கார ணத்தால்; கரைமுற்றுஞ் சென்றுநிலை சொல்லி வந்தோம்; தவித்துவரும் மக்களுக்குப் புகலுந் தந்தோம்; வெறியுற்ற மனப்போக்கர் வலிய வந்து விண்வெளியில் பறந்துநமைத் தாக்கி நின்றார்; நெறிகெட்டு வந்தவர்க்குப் பழைய பாடம் நினைவூட்ட நிமிர்ந்தெழுந்தோம் ஒன்று பட்டோம்.