பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஒங்கும் ஒழுக்கத் துயர்ந்தானே எவ்வெவர்க்கும் தீங்கு நினையானைச் சேரிவாழ் நந்தனைப் பொன்னம் பலத்துட் புகுந்து வழிபடத்தான் முன்னம் தடுத்தார்கள் முப்புரியார்; முப்புரத்தைச் சுட்டான் திருமுன்னர்த் தொண்டன் திருவுருவைச் சுட்டார் புடமிட்டார் தூய உடலாக்கி உட்புகுதச் செய்தார்; ஒருவிழியில் தீயுடையான் அப்புறந்தன் ஏற்றான் அவனை எனவுரைப்பf: தீண்டாமை என்றதொரு தீய பழக்கத்தால் /* ஆண்டான் அடிமை எனும் ஆணவமுங் கொண்டதனால் சேரிப் புறத்திற் சிறுகுடிலில் வந்தவனைப் பேரில் உயர்ந்தோர் பெருந்தீங்கு செய்துவிட்டார்; சீரங்கம் கொண்டானைச் சிந்தை நினைந்துருகிப் பாரெங்கும் பாடிப் பரவிவரும் பாணனவன் ஊரின் ஒருபால் ஒதுங்கிக் கிடக்கு-மொரு சேரி தருங்குடிசை செய்தவத்தால் வந்தமகன் காவிரியின் ஒர்கரையில் கண்மூடிக் கொண்டங்கு நாவிரிக்கும் பாடல் நலம்விரித்துப் பாடுங்காற் பூசைக்குச் செல்கின்ற பூசுரர்கள் அப்பாடல் ஒச்ை செவிபுகுத ஒர்பால் தனிநின்று செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்கள் ஆனமையால், வெந்தழல்போற் சீறி விரைதிதெறிந்தார் கல்லெடுத்து; ந் விட்டெறிந்த கல்லின் விர்ைவால் தலையுடைந்து கொட்டுகிற செங்குருதி கூடியது காவிரியில்; கண்டுநிகர் பாடல் கசிந்துருகிப் பாடியவன் மண்டை உடைய மதிகலங்கக் காரணமென்? தீண்டான்ம யன்றோஅத் தீய பழக்கத்தைப் பூண்டோடு தீயிற் பொசுக்கும்நாள் எந்நாளோ? தாழுங் குமுகாயம் சாதிச் சழக்ககற்றி வாழும்நாள் எந்நாள் வரும்? TL n কে i = دانش این n که n نه به"