பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பொருட் பெருக்கம் ஏற்படவில்லை. அப் பெருந்தொகை யினா வாழ்ந்தாகவேண்டும். எதைச் செய்தேனும் எப்படி யேனும் வாழ்ந்து தீசவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி விட்டனர். அதனால் பொருள் ஒன்றுதான் குறிக்கோளே தவிர அது வரும் வழியைப் பற்றி அக்கறை கொள்ளவோ சிந்திக்கவோ அவர்களுக்கு நேரமில்லை. ஆகவே ப ண் பா டு ப ற் றி க் கவலைப்படாமல், நாடோறும் ம க் க ைள ப் பெருக்கிக் கொண்டேயிருக்கும் குமுகாயம், கண்ணை மூடிக்கொண்டுதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது, பயணஞ் செய்யும் வழியில் ஆழங்காண இயலாத பெரும் பள்ளம் இருப்பதை உணர்ந்தோர் சிவப்பு வி ள க் கை க் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள் == எனினும் விழித்துப் பார்க்காமல் வேகமாக நடைபோட்டுக் கொண்டுதான் செல்கிறது குமுகாயம் என்று விழிக்குமோ தெரியவில்லை. ! -

பண்பாட்டை ஒர் ஏளனப் பொருளாகக் கருதிப் புறக் கணித்துவிட்டு, மக்கள் நடந்து செல்வதைக் காணுந்தொறும் மனம் வருந்தி உருகுவதுண்டு. மக்களின் தவறான போக்கு, என் நெஞ்சத்தில் அழுத்திக் கொண்டேயிருக்கும், வாய்ப்பு .ே ந ரு ம் போதெல்லாம் அவ்வழுத்தத்தால் ஏ ற் ப ட் ட' வேதனைகளை வெளிப்படுத்துவதுண்டு. அ. த ைண என் கடமையாகவே ஏற்றுள்ளேன். ' கவிதை என் கைவாள் H என்று கவிஞர் ஒருவர் கூறியதை அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. கு மு கா ய க் குறைகளை . தீமைகளைகொடுமைகளை எதிர்க்க அக்கைவாளைப் ப ய ன் படுத் தி வருகிறேன். * -