பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7| கல்லாக் குடும்பத்துங் கற்ற குடும்பத்தும் எல்லாக் குடும்பத்தும் இச்சிறுமை காண்பதுண்டு; வையத்துள் வாழ்வாங்கு வாழாத ஒர்குடும்பம் நையப் புடைக்கும் நரகம் எனவாகும்; எங்கோ நர கொன் றிருக்கின்ற தென்றுரைப்பார் இங்கேதான் அந்த இடர்நரகுங் காண்பதுண்டு) இல்லாள் மனைமாட்சி இல்லாளேல் அவ்வாழ்க்கை பொல்லா நரகாகும் பொன்றாத் துயராகும்; பேரின்ப வீடெனவும் பீழை யுறுநரக ஊருண் டெனவும் உரைத்திடுவர் கண்டதிலை: ஆனாலும் நம்மருகில் அவ்விரண்டும் உண்டென்று கானா தலைகின்றோம் கண்ணிருந்துங் காணுகிலோம்: போலித் தனமெல்லாம் போற்றித் திரியாமல் வேலிக்குள் நின்றே விளைபயனைத் துய்த்திடுவோம்: அன்பே துணையாக ஆற்றுங் குடும்பத்தில் இன்பம் நிலைக்கும் இனிது