பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7& கலைக்கோட்டம் என்றிருந்தேன் காமக் கோட்டக் கதவன்றோ திறந்துவிட்டார்: இளைஞர் அந்தப் புலைக்கோட்டம் புகுவதற்கே ஆசைப் பட்டுப் பொல்லாத கனவுகளைக் கண்டு கெட்டார்; வலைக்கோட்டு மானினம்போற் சிக்கிக் கொண்ட வஞ்சியரும் தறிகெட்டுத் திரிதல் கண்டேன்; விலைப்பாட்டுக் கவிஞரெலாம் எழுதும் பாட்டை விலைமாதும் கேட்பதற்குக் கூசி நிற்பாள். காதலெனும் மென்மலரைக் கசக்கி மோந்து காட்டுகிற திரைப்படங்கள் உலவி வந்தால் ஏதமுறத் தோலுரித்துக் காட்டும் பாங்கில் எழுதிவரும் திரைப்பாட்டைக் கேட்டு வந்தால் தீதகலக் காந்திநபி ஏசு புத்தர் தெருத்தெருவா நின்றிருந்து போதித் தாலும் ஒதுபயன் உண்டாமோ? தணிக்கை செய்வோர் ஒளிபெற்ற கண்பெற்றால் நன்மை உண்டாம்.