பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 இன்றைய மனிதன் தமிழ்ப்பேரவை-திருவானேக்கா. 25–4 – 1965 +. ക്കൂ. -ണ്' பூவுலகங் -ഷl- பொங்குங் களிசிறக்கப் பாவுங் கதிர்பரப்பிப் பைய வருங்கதிரோன் நட்ட நடுவானில் நண்ணிவெயில் விட்டெரிக்கும் பட்டப் பகலில் பலபேர் நடமாடும் வெட்ட வெளியில் விரிந்த நடுத்தெருவில் முட்ட நரைத்த முதுமைப் பெருங்கிழவர் தாங்கும் இடக்கையில் தண்டுன்றித் தந்தலைமேல் ஒங்கும் வலக்கையில் ஒர்விளக்கை ஏந்திநின்று முன்னே வருவோர் முகமெல்லாம் பார்த்தலுத்துப் பின்னேயுந் தேடிஅவர் பேதலித்து நின்றிருந்தார்: ஆண்டு வருவோர்தாம் அக்கிழவர் பாலணுகி. "ஈண்டெதனைத் தேடி இளைத்தீரோ என்றார்க்குத் தேடுகிறேன் மாந்தனைத்தான் தேடி அலைந்தலைந்து வாடுகிறேன்’ என்றுரைத்தார்: "வெய்ய பகல்தனிலோ கையில் விளக்கெடுத்துக் காணப் புறப்பட்டீர்? வெய்யில் கொடுமை விளைத்த புதுமையிதோ? ஒன்றும் புரியவிலை உம்செயலே விந்தையதாம்’ என்று பலசொல்லி எள்ளி நகைத்தார்கள்: முட்ட-நிறைய. یا r۲ و عکایی ارای A =صامعه" به مع، (کمه یو له