பக்கம்:மனிதனைத் தேடுகிறேன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

рт எஞ்சாத ஞானத்தின் எக்களிப்பும், யாவர்க்கும் அஞ்சாத நல்வழியும். ஆண்மையுறு நன்னடையும், நேர்கொண்ட பார்வையொடு நேரிழையார் பெற்றுவிடின் சீர்கொண்ட நம்நாடு செம்மை திறம்பாது; நாற்றிசையும் ஓங்கியுயர் நாடெல்லாம் இந்நாட்டுக் கோற்றொடியார் சென்றங்கு கூடும் புதுமைகளைக் கொண்டுவந் தின் பங் கொழிக்கச் செயவேண்டும்: மண்டும் புகழ்நூல்கள் வாழ்வில் உறுநுட்பம் கற்றுத் தெளிந்துணர்ந்து கட்டுக் கதை தகர்த்துச் சுற்றுந் துயர்துடைக்கச் சொல்லும் புதுமைப்பெண் நாட்டுக்கு வேண்டுமென நல்ல சுவைகூட்டும் பாட்டுக்கு வேந்தனெனும் பாரதி சொல்லிவைத்தான்; "பூவுலகோர் நம்நாட்டைப் போற்றிப் புகழவெனில் பாவையர்கள் முன்னேற்றப் பாதை தனிற் சென்றிடுக! என்னுங் கருத்தை எடுத்துரைத்தான்; அன்னவரும் முன்னம் இருந்தகொடும் மூடப் பழக்கத்தைக் கல்லிக் கடிந்தெறிந்து கல்வித் துறைமுதலாச் சொல்லும் நெறியெல்லாந் தோன்றுகின்றார் முன்னேறி: வாழ்விற் சரிபங்கு வாய்ப்பும் பெறுகின்றார்: தாழ்வுறுதல் இல்லையவர் தாம்.