பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திறப்புரை



திறத்தல் அவசியந்தான். எதைத் திறக்க வேண்டும்? இதோ இந்த மாநாட்டுப் பந்தலோ அன்றி மண்டபமோ முன்னரே திறந்திருக்கிறதே ! மக்கள் பல்லோரும் இங்கு முன்னரே கூடியுள்ளனரே! எனினும், திறப்புரை என்ற பகுதியும் செயலும் இங்கு எதற்காக ? திறந்துள்ள ஒன்றைப் பின்னும் திறப்பதா ? இவை போன்ற கேள்விகளுக்கு இடம் ஏழலாம். எனினும், இம்மாநாட்டின் மூலம் மக்கள் உள்ளங்கள் திறக்கப்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வசதிகள் திறக்கப்படவேண்டும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்கும் சன்மார்க்க நெறி திறக்கப்பட வேண்டும். ஆம் ! ‘இதுவரையில் அந்நெறி அடைபட்டுக் கிடந்ததா? கிடக்கிறதா?’ என்று கேட்கத் தோன்றும் சிலருக்கு. உண்மையில் ஓரளவு முடித்தான் அடைப்பட்டுக் கிடக்கிறது. உலகம் உண்டாகிப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்த பின்னும், வள்ளுவரும், காந்தியும், பிற பெருநெறிப் பண்