பக்கம்:மனிதன் எங்கே செல்கிறான்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் ஊழியர்

99



தம் குறைகள் முழுதும் நிறைவாக்கப்படவில்லை என்பது கண்கூடு. நாமே நம்மை ஆளும் இந்த நல்ல நாளில், இவர்தம் குறை முடிவு பெற வேண்டும். இவர் தம் குறையின் நிறைவே மக்கள் மனநிறைவு. இவர்களும் மக்கள் மனமறிந்து, அவர்தம் குறை முடித்து, நாட்டை நாடாகச் செய்ய வேண்டும். அதே வேளையில் அரசாங்கமும் இம்மக்கள் ஊழியர் மனம்மகிழக் குறை முடிக்க வேண்டும். எல்லாரும் இன்புற்றிருக்க நினைக்க எண்ணும் நல்உள்ளம் அனைவரிடமும் மலரின், மக்கள்-மக்கள் ஊழியர்-ஆளும் நல்லவர்-அமைச்சர்-அன்றி அரசர் ஆகிய அனைவரும் நலம் பெற்று வாழ வழியுண்டு! அந்நலம் பெற அனைவர் உள்ளமும் திறக்கப் பெறல் வேண்டும். வல்லவர் அத்திறப்புக்கு வழி அமைப்பார்களாக! வாழ்க வையகம்!