பக்கம்:மனிதன் மாறவில்லை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதன் மாறவில்லை 19

விட்டங்கள் அத்தனையையும் எட்டிப் பார்த்தாள்; பரண்கள் அத்தனையையும் ஏறிப் பார்த்தாள் ஊஹாம் - காணவில்லை; காணவேயில்லை.

அப்போது.... ‘குவா, குவா என்ற குழந்தையின் அழுகுரல் மீண்டும் ஒலித்தது - எங்கிருந்து? - அதே வீட்டிலிருந்து தான்.

என்ன ஆச்சரியம்! விசாலம் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போகவில்லையா? இந்த வீடே. துப்பறியும் நாவல் போலிருக்கிறதே?

“விசாலம், விசாலம்!’ - கத்தினாள் கல்யாணி. பதில் இல்லை; குழந்தையின் அழுகுரல் மட்டும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

குழந்தையை இங்கேயே எங்கேயாவது தூங்க வைத்து விட்டு அவள் மட்டும் வீட்டுக்குப் போய்விட்டாளா, என்ன? தூக்கம் கலைந்து எழுந்த குழந்தை அவளைக் காணாமல் அழுகிறதா, என்ன?

‘விசாலம், விசாலம்!’ - மறுபடியும் கத்தினாள் அவள்.

ஊஹாம் - பதில் இல்லை; பதிலேயில்லை! குழந்தையின் அழுகுரல் அவுட்-ஹவு'சிலிருந்து வருவது போலல்லவா இருக்கிறது? எதற்கும் அங்கே போய்த்தான் பார்ப்போமே?

போனாள்; அங்கே...

குழந்தையைத்துக்கித் தேற்றியபடி, விசாலம் திருட்டு விழி விழித்துக்கொண்டிருந்தாள்.